நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?!
பகடை ஆட்டத்திற்குமுன், பாண்டவர்கள் செழிப்பு மற்றும் சக்தியின் உச்சத்தை அடைந்திருந்தனர். துரதிருஷ்டவசமாக, அவர்கள் அத்தகைய வளர்ச்சியைக் கையாள போதுமான ஞானத்தை பெற்றிருக்கவில்லை. அவர்களுடைய ஆன்மீக வழிகாட்டியாக எப்போதும் கிருஷ்ணனே இருந்தான். ஒருமுறை, அவன் அங்கு இல்லை - அவர்கள் செய்திவைத்திருக்கிற குழப்பத்தை காணுங்கள்! பிரச்சனை யாதெனில், பாண்டவர்கள் கண்ணியமானவர்களாக இருந்தபோதிலும் - கடவுளுக்கு பயந்திருந்த போதிலும், எவ்வித கேள்வியுமின்றி சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாக இருந்தபோதிலும் - ஒரு உயர்ந்த முதிர்ச்சி ஒன்று அவர்களிடம் இல்லை. அவர்கள் உள் குரலுடனும் உள்ளுணர்வு ஞானத்துடனும் தொடர்பு கொள்ளவில்லை. உண்மையில், கிருஷ்ணனே அவர்களின் உள் குரல். ஆனால், அவர்கள் தங்களுக்குள் கடந்து சென்று, "கிருஷ்ணத்துவத்தை (Krishna-hood)" தங்கள் இதயங்களில் சுயேட்சையாக பெற்றுக் கொள்ள வேண்டும். யுதிஷ்டிரர் விளையாட்டை கையாண்ட விதம் அவர் இன்னும் முழுமையாக 'பூர்ண' சக்கரவர்த்தி ஆகவில்லை என்பதை காட்டியது - பூரணமடைய இன்னும் இருக்கிறது. புத்தகவியலான அந்த முழுமை போதுமானதாக இல்லை. அவர் தர்மத்தின் அ...











